13/10/2015
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தொகுதி-2A (நேர்முக தேர்வு அல்லாத) (ஒருங்கிணைந்த சார்நிலைப் பணிகள்) தேர்வுக்கான அறிவிக்கையினை (12.10.2015) வெளியிட்டுள்ளது. 1863 காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் இணைய வழி மூலம் மட்டுமே வரவேற்கப்படுகின்றன.
தேர்வாணையச் செய்திக் குறிப்பு
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தொகுதி-2A (நேர்முக தேர்வு அல்லாத) (ஒருங்கிணைந்த சார்நிலைப் பணிகள்) தேர்வுக்கான அறிவிக்கையினை (12.10.2015) வெளியிட்டுள்ளது. இவ்வறிவிக்கையில், ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை (403), மருத்துவம் மற்றும் கிராம சுகாதார பணிகள் (213), பதிவுத்துறை (59) வணிகவரித்துறை (191) தலைமைச்செயலக நிதித்துறை (26), தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் (62), மீன்வளத்துறை (45), போக்குவரத்துத் துறை (35), பள்ளிக் கல்வி இயக்ககம் (76), பொது சுகாதாரம் மற்றும் நோய்தடுப்பு மருத்துவத்துறை (136) மற்றும் இதர பல துறைகளில் உள்ள உதவியாளர் பதவி மற்றும் கூட்டுறவுத் தணிக்கைத் துறையில் இளநிலை கூட்டுறவு தணிக்கையாளர் (308) பதவி ஆகியவற்றில் உள்ள 1863 காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் இணைய வழி மூலம் மட்டுமே வரவேற்கப்படுகின்றன.
1. அறிவிக்கை நாள் 12.10.2015
2. இணையவழியாக விண்ணப்பிக்க கடைசி நாள் 11.11.2015
3. வங்கி மற்றும் அஞ்சலகங்கள் மூலமாக விண்ணப்பக்கட்டணம் மற்றும் தேர்வுக்கட்டணம் ஆகியவற்றை செலுத்த கடைசி நாள் 13.11.2015
4. தேர்வு நாள் (கொள்குறி வகை) 27.12.2015
5. கல்வித்தகுதி அறிவிக்கையில்குறிப்பிட்டுள்ளவாறு
6. விண்ணப்பக்கட்டணம் (நிரந்தரப் பதிவுக் கட்டணம்) ரூ. 50/-
7. தேர்வுக்கட்டணம் ரூ. 75/-
8. தேர்வுக்கான பாடம் (கொள்குறி வகை) பொது அறிவுடன் பொதுத் தமிழ் அல்லது பொது ஆங்கிலம்
9. தேர்வு மையங்களின் எண்ணிக்கை 116