22/10/2016
வணக்கம் 21ம் நூற்றாண்டில் தொழில்நுட்ப வளர்ச்சி, அதன் மேலுள்ள மோகம், அனர்த்தங்கள் என்பன நாளுக்கு நாள் பெருகிக்கொண்டே செல்கின்றது என்பது யாவரும் அறிந்ததே, தொழில்நுட்ப சாதனங்களால் ஏற்படும் விபத்துக்களிலிருந்து மீள வெளிவருவது என்பது சாதாரண விடயம் அல்ல, எதிர்கால சந்ததியினையே பாதிக்கும் அளவிற்கு இவ் தொழில்நுட்ப வளர்ச்சி பாரியளவு விரிவடைந்துள்ளது.
சாதகம் பாதகம் என்பது சரி நிகராக உள்ளது வருந்தத்தக்கது, தற்காலத்தில் வீட்டிற்கு வீடு கணனி, ஸ்மார்ட் போன் போன்ற அடிப்படை தேவையாக உள்ளது. இதில் குறிப்பாக ஸ்மார்ட்போன் மோகம், கவர்ச்சி மானிட யுகத்தை தன்பக்கம் ஈர்த்துள்ளது.
நேரடியாக கூறவந்த முதல் விடயத்தை நோக்கினால், ஸ்மார்ட் போன்களால் ஏற்படும் விபத்துக்கள் நாளுக்குநாள் அதிகரித்து செல்கிறது,
இவ் விபத்துக்கள் ஏன் ஏற்படுகின்றது? அதற்கான காரணங்கள் எவை என்பது பற்றிய பல வினாக்கள் நம்மவர் மனங்களில் எழுகின்றதல்லவா?
ஆம் என்பதுவே பெருப்பான்மையோரின் பதிலாக அமையும்,
ஸ்மார்போன்களின் விபத்துக்களிற்கு மானிடராகிய நாமும் காரணமாக அமைகிறோம், அது எவ்வாறு?
* பாவனை
* கையாளும் திறன்
* அறியாத செயல்களில் ஈடுபடல்
முதலிய முக்கிய அம்சங்களால் விபத்துக்கள் சம்பவிக்கின்றன, இவற்றை சற்று விரிவாக நோக்குவோமானால்,
1.) SMART PHONES ஐ பொறுத்தமட்டில் பல BRANDஐ கொண்டுள்ளது.செல் பேசிகள் பொதுவாக அதிர்வு அலைகளை வெளியிடக் கூடியவையே, மலிவான விலைகளில் கிடைக்கும் CHINAPHONES அதிகப்படியான அதிர்வைக்கொண்டது.இதனை ஜீன்ஸ்ஸில் வைப்பதைக் குறைப்பது மிகவும் நன்று.
2.) ஜீன்ஸ் பொக்கடட்டில் செல் போனை வைக்கும் போது போனின் DISPLAY பக்கம் உடலில் தொடும் வகையில் வைப்பதன் மூலம் ஆபத்தைக் குறைக்கலாம், அதாவது பற்றரி பகுதி உடலில் தொடக்கூடியவாறு வைத்தால் உடல் வெப்பத்தால் பற்றரி வெடிக்கக்கூடும்மற்றும் எதிர்பாராத விபத்தால் போனின் தோடுகைத்திரைக்கு பாதிப்பு ஏற்படலாம். போனை தொடர்ச்சியாக பாவித்த பின் ஜீன்ஸ் பையில் வைப்பதை தவிர்க்க வேண்டும், காரணம் தொடர்ச்சியான பாவனையின்போது போன் வெப்பமாகியிருக்கும், பாக்கட்டில் வைத்தால் வெப்பம் கடத்தப்படாது, அடக்கப்படும். இதால் நிச்சயம் விபத்து நிகழும்.
3.) இரவில் SMART PHONE ஐ பயன்படுத்திவிட்டு நித்திரை செய்துவிடுவார்கள். மற்றும் போனை தம்மருகில் வைத்து நித்திரை செய்வார்கள், முற்றாக தவிர்க்கப்படவேண்டியதாகும்.காரணம் காந்த அலைகள் ( MAGNETIC WAVES ) எமது மூளைக்கு உகந்ததல்ல. ஆய்வுகளின் அடிப்படையில் மூளைப்புற்றுநோய் ஏற்படலாம்.
4.) பெரும்பாலானவர்கள் செல் போனை CHARGE செய்து கொண்டு உரையாடுவது, இணையம் பயன்படுத்துவது,கேம் விளையாடுவது போன்ற செயற்பாடுகளில் ஈடுபடுகிறார்கள், முற்றாக தவிர்க்கப்பட வேண்டியதாகும்.மற்றும் CHARGE செய்ய முன் போனின் BACK COVER , OPEN COVER போன்றவற்றை நீக்கிவிட்டு CHARGE செய்வது சிறந்தது. இவ்வாறு ஏன் செய்ய வேண்டும்? போன் charge ஆகும்போது சாதுவான வெப்பத்தை உணர முடியும், தொடர்ச்சியான பாவனை இதன் வெப்பத்தை அதிகரிக்கும், மற்றும் போன் charge குறைவான நேரத்தில் ( LOW BATTERY