29/12/2023
செயற்கைக்கோள் உற்பத்தி தொழில் :-
-----------------
R. முஹம்மது அனஸ் B.E (ECE), B.Sc (Psy)
+91 86080 33532
----------------
விண்வெளி துறையில் இஸ்ரோவை போலவே நூற்றுக்கணக்கான தனியார் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன அவற்றிடம் சேட்டிலைட் ஏவுவதற்கான ராக்கெட்டுகள், ராக்கெட்டை ஏவும் பூஸ்டர் தொழில்நுட்பம், சாட்டிலைட் தயாரிக்கும் தொழில்நுட்பம் என அனைத்தும் கடந்த ஐந்து ஆண்டுகளில் பெரும் வளர்ச்சியை கண்டு வருகிறது.
அவற்றில் முக்கிய பங்காற்றி வரும் இரண்டு தனியார் நிறுவனத்தை பற்றியும் அதில் இருக்கும் உயர் கல்வி, வேலைவாய்ப்பு , ஆராய்ச்சி வாய்ப்புகள் குறித்து பார்க்கலாம்.
1. Pixeel , பெங்களூரு
------------------
2018 ஆம் ஆண்டு பெங்களூரில் துவங்கப்பட்ட இந்த நிறுவனம் ஹைப்பர் ஸ்பெக்ட்ரல் இமேஜிங் என்ற தொழில்நுட்பத்தை உள்ளடக்கிய செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவி வருகிறது.
இதுவரை இஸ்ரோ மற்றும் ஸ்பேஸ் X நிறுவனத்தின் மூலம் டெமோ சேட் 1, சகுந்தலா மற்றும் ஆனந்த் என்ற மூன்று செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவியுள்ளனர்.
ஹைப்பர் ஸ்பெக்ட்ரல் இமேஜிங் என்றால் என்ன?
ஒரு இலையை நமது மொபைல் போனில் படம் பிடிக்கும் பொழுது நமக்கு RGB என்று அலை நீளங்களை கொண்ட இமேஜ் கிடைக்கும், இதன் மூலம் இந்த படத்தில் உள்ளது இலை என்று நாம் தெரிந்து கொள்ளலாம்
ஹைப்பர் ஸ்பெக்ட்ரல் இமேஜ் முறையில் அதே இலையை படம்பிடிக்கும் போது அந்த இலையில் உள்ள நியூட்ரிஷியன் கன்டென்ட் , குளோரோஃபில், கனிம வளங்கள் (பொட்டாசியம், மாங்கனீசு Etc...) போன்ற தகவல்களை நம்மால் தெரிந்து கொள்ள முடியும்.
எண்ணெய் மற்றும் எரிவாயு குழாய்களை பூமிக்கு அடியில் கொண்டு செல்லும் பொழுது அவற்றில் ஏற்படும் கசிவுகளையும் இந்த தொழில்நுட்பத்தின் மூலம் கண்டுபிடிக்கலாம்
இதுவரை இந்த தொழில்நுட்ப செயற்கைகோள்கள் அரசு சார்பில் மட்டுமே அனுப்பப்படும் அந்த தகவல்கள் அனைத்தும் நாட்டின் அரசு நிறுவனங்கள் மற்றும் ராணுவ பயன்பாடுகளுக்கு மட்டும் கொடுக்கப்படும்.
கூகுள் போன்ற மிகப் பெரிய நிறுவனங்கள் இதுவரை pixeel நிறுவனத்தில் பல மில்லியன் டாலர்கள் முதலீடு செய்துள்ளன 2024 ஆம் ஆண்டின் கடைசிக்குள் 30 தொடர் செயற்கைக்கோள்களை விண்ணில் நிலை நிறுத்துவதை இலக்காக கொண்டுள்ளது இந்நிறுவனம்.
2. Skyroot Aerospace , ஐதராபாத்
------------------
இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட் தயாரிக்கும் நிறுவனமான SKYROOT AEROSPACE 2018 ஆம் ஆண்டு துவங்கப்பட்டது, தங்களின் ரக்கெட்களுக்கு தேவைப்படும் ப்ரொபெல்லர் முதல் டிசைன் வரை அணைத்தும் இவர்களின் சொந்த தயாரிப்பு
மறைந்த முன்னாள் ஜனாதிபதி Dr. அப்துல் காலம் அவர்களின் நினைவாக தங்களின் ப்ரொபெல்லர்களுக்கு கலாம் - 80 என்று பெயரிட்டுள்ளனர். நவீன தொழில்நுட்பங்களான 3டி பிரின்டிங் , கார்பன் பைபர் இலைகள் போன்றவற்றை தங்களின் ராக்கெட்களில் பயன்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது
இதுவரை இவர்கள் விக்ரம் - s , விக்ரம் - I , விக்ரம் - II , விக்ரம் - III என்ற நான்கு ரக்கெட்களை தயாரித்துள்ளனர்
விக்ரம் - s
-------------
நவம்பர் 18, 2022 அன்று விக்ரம் - S ராக்கெட் வெற்றிகரமாக இஸ்ரோவின் ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்தில் இருந்து ஏவப்பட்டது. 80 kg எடையை விண்ணில் 100 km தொலைவிற்கு ( வெப்ப அடுக்கு - Thermosphere ) வரை எடுத்து சென்று தனது முதல் முயற்சியில் சாதனை படைத்தது.
விக்ரம் -s ராக்கெட்டில் மூன்று செயறகைக்கோள்கள் இடம்பெற்றன 1. அர்மேனிய நாட்டின் BAZOOMQ, 2. சென்னையை சேர்ந்த SPACE KIDZ INDIA 3.ஆந்திராவை சேர்ந்த N-SPACE TECH ஆகிய நிறுவனங்களின் செயற்கை கோள்கள் சோதனை முறையில் விண்ணில் செலுத்தப்பட்டன.
விக்ரம் - I, II, III
-------------------
அதிகபட்சமாக 480 kg எடையுள்ள செயற்கோள்களை 500 km தொலைவில் LIO (Low Inclination Orbit) ஆர்பிட்டிலும் 290 kg to எடையுள்ள செயற்கோள்களை 500 km தொலைவில் SSPO (Sun Synchronous Polar Orbit) ஆர்பிட்டிலும் செலுத்தும் திறன் கொண்டது.
விக்ரம் - II மற்றும் III ராக்கெட்டுகள் முறையே 595 kg எடையுள்ள செயற்கைக்கோளை to 500 km (LIO) தொலைவிலும் , 815 kg to எடையுள்ள செயற்கைக்கோளை 500 km (LIO) தொலைவிற்க்கும் எடுத்து செல்லும் திறன் கொண்டது.
எங்கு படிக்கலாம்?
------------------------
ராஜஸ்தான் , கோவா மற்றும் ஐதராபாத் இல் உள்ள BITS - Pilani (Birla Institute of Technology & Science) கல்வி நிறுவனத்தில் Pixxel நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி உவைஸ் அஹமது அவர்கள் படித்துள்ளார். இந்த நிறுவனத்தில் பனிரெண்டாம் வகுப்பிற்கு பின்பு எப்படி படிப்பது என்று பார்க்கலாம்
Birla Institute of Technology And Science, Pilani (BITS Pilani)
------------------
பாடப்பிரிவு :-
------------
இளங்கலை பொறியியல் மற்றும் முதுகலையில் கணிதம் , உயிரியல் , பொருளாதாரம் , இயற்பியல் , வேதியியல் பாடப்பிரிவுகள் உள்ளன, டூயல் டிகிரி படிக்கும் வாய்ப்புகளும் இங்கு உள்ளது
தகுதி தேர்வு :-
--------------
பனிரெண்டாம் வகுப்பில் இயற்பியல் / வேதியியல் / கணிதம் உள்ளிட்ட பாடங்களை எடுத்து படித்திருக்க வேண்டும்
வருடம் ஒருமுறை நடத்தப்படும் BITSAT எனும் எனும் நுழைவு தேர்வில் வெற்றி பெற வேண்டும். இதற்கான தேர்வு மையம் சென்னை மற்றும் கோவை யில் உள்ளது மத்திய அரசின் NCERT படப்பிரிவுகளின் 11 மற்றும் 12 வகுப்பு புத்தகத்தில் இருந்து கேள்விகள் இடம் பெரும். 2024 ஆம் வருடம் ஜனவரி மாதம் BITSAT தேர்வு குறித்து அறிவிப்பு வெளியிடப்படும்
மத்திய, மாநில அரசின் பொது தேர்வில் மாநிலத்தில் முதல் மாணவராக தேர்ச்சி பெறவதன் மூலம் இங்கு சேரலாம்
மேலும் விவரங்களுக்கு https://www.bitsadmission.com/ என்ற இணையதளத்தை பார்வையிடவும்.
வேலைவாய்ப்பு ?
------------------
Pixxel நிறுவனத்தில் ஆப்டிகல் , எலக்ட்ரிகல் , எலக்ட்ரானிக்ஸ் , மெக்கானிக்கல் , ஏரோஸ்பேஸ் போன்ற துறைகளிலும் முதுகலை மற்றும் ஆராய்ச்சி படிப்பு முடித்தவர்களுக்கு பணி வாய்ப்புக்கள் உள்ளது.
தற்போது இந்த நிறுவனத்தில் உள்ள வேலைவாய்ப்புகளை தெரிந்து கொள்ள https://www.pixxel.space/careers என்ற இணையதளத்தினை பார்வையிடவும்
மேற்காணும் நிறுவனத்தில் உள்ள அறிவை அடிப்படையாக (Knowledge Based) கொண்டு பணிக்கு முன்னுரிமை கொடுத்து உங்களை தயார்படுத்தி கொள்ளுங்கள். நீங்களும் சமூக ஆழுமை ஆகலாம்....
உயர் கல்வி ஆலோசனைகளை பெற https://wa.link/hld2ob இணைப்பை கிளிக் செய்யவும்.