24/05/2026
அன்புகூர்ந்து நேரம் ஒதுக்கி படியுங்கள். மற்றவர்களுக்கும் அனுப்புங்கள்.!
பல நூறு முறை எச்சரித்துவிட்டேன். இன்னமும் சொல்லிக்கொண்டே இருக்கிறேன்.
AI தொழில்நுட்பம் நம்மை போன்ற BC, MBC, SC, ST பிரிவு முதல் தலைமுறை பட்டதாரி இளைஞர்களின் எதிர்காலத்தை மிகப்பெரிய கேள்விக்குறி ஆக்கிவிட்டது.
2000-2020 வரை பொறியியல் படித்தவர்களில் 100 க்கு 80 பேர்களை CTS, TCS, Wipro, HCL, Tech Mahindra (Sathyam), CapGemini, Infosys போன்ற இந்தியாவின் முதன்மை நிறுவனங்கள் வேலைக்கு எடுத்துக்கொள்ளும். ஆனால் இப்போது நிலைமை வேறு விதமாய் இருக்கிறது. 100 க்கு 30 பேர் எடுத்தாலே பெரிய விஷயம் என்றாகிவிட்டது. பல B, C centre கல்லூரிகளில் சுத்தமாக Placement என்பதே இல்லாமல் போய்விட்டது.
இதில் 10-20 வருட அனுபவம் உள்ளவர்கள் பரவாயில்லை. இத்தனை ஆண்டுகளில் லட்சங்களை தாண்டும் சம்பளங்களில் கல்வி கடன் அடைத்து, வீடு கார் என்று ஓரளவு செட்டில் ஆகி இருப்பார்கள். ஆனால் இப்போது தான் வேலைக்கு போய் கடனை அடைக்க வேண்டும், குடும்பத்தை கரையேற்ற வேண்டும் என்று இருக்கும் இளைஞர்களின் நிலை தான் கொடுமை. பல லட்சங்களை கொட்டி பெயரளவுக்கு படித்த பட்டம் அவர்களுக்கு வேலையும் தரவில்லை, Communication Skill கொடுக்கவில்லை, தெருவில் இறங்கி வாழ்க்கையை சந்திக்கும் தைரியத்தையும் தரவில்லை. சமூக ஊடகம் ஒரு போதையில் வைத்து எதார்த்த வாழ்க்கை என்றால் என்ன என்கிற விழிப்புணர்வும் தரவில்லை.
இதில் FC சமுதாயங்கள் பரவாயில்லை. வழக்கம் போல மாற்றங்களை முன்கூட்டியே கணித்து பிள்ளைகளை சரியாக வழிநடத்தி, கல்வியில் குழப்பம் , கவன சிதறல், தவறான பழக்கங்கள் என்று ஆகாமல் கரை ஏற்றிவிட்டார்கள். இப்போது வேலையில் இருப்பவர்களும், ஆர்வமாக வேலை தேடுபவர்களும் FC பிள்ளைகளாக தான் இருக்கிறார்கள். குறையாக சொல்லவில்லை.
ஆனால் நாம் பிள்ளைகளின் நிலையை நினைத்து கொஞ்சம் வயித்தெரிச்சலாக இருக்கிறது. இப்போது தான் என் வயது ஆட்கள், முதல் தலைமுறை பட்டதாரியாக மஞ்ச பையை தூக்கிக்கிட்டு சென்னைக்கு வந்து ஓரளவு செட்டில் ஆனோம். அதற்குள் எல்லாமே அழிந்து மீண்டும் முதலில் இருந்தா என்று அயற்ச்சியாக, அதிர்ச்சியாக உள்ளது.
இன்னமும் என்னிடம் ஆலோசனைக்கு வரும் MBC/SC பிள்ளைகள் பெரும்பாலும்,
1 - சாஃப்ட்வேர் துறையில் என்ன நடக்கிறது என்ற அடிப்படை விழிப்புணர்வே இல்லாமல் இருக்கிறார்கள்.
2 - யாரோ சொன்னார்கள் என்று இப்போது கூட Testing Course முடிச்சிருக்கேன் என்று பெருமையாக சொல்கிறார்கள்.
3 - காசு கொடுத்தால் எளிதாக சாஃப்ட்வேர் இஞ்சீனியர் வேலை வாங்கி தந்துவிடுவார்கள் என்று நம்புகிறார்கள்.
எனக்கு தெரிந்த பல கல்லூரிகளில் 0 Placement .
ஒரே ஒருவரை கூட வேலைக்கு எடுக்கவில்லை. எடுத்தாலும் Call centre, Data Entry போன்ற dead end வேலைகளாக உள்ளன.
Software துறை வழக்கமான Java, . Net, Python, Testing, Cloud இதை எல்லாம் தாண்டி வெகு தூரம் போய்விட்டது.
இப்போது சாஃப்ட்வேர் என்பது RAG, LangChain, LangGraph, GuardRails என்பதை எல்லாம் தாண்டி Spec Driven Development, Self authoring systems என்று எங்கோ வேறு தளத்தில் கைக்கு எட்டாத தூரத்தை நோக்கி போய்க் கொண்டிருக்கிறது.
தற்போது இந்தியாவில் மொத்தம் உள்ள 70 லட்சம்+ சாஃப்ட்வேர் தொடர்பான வேலைகளில் அடுத்த 2 ஆண்டுகளில் வெறும் 20 லட்சம் தான் மிஞ்சும். அந்த வேலைகளையும் உள்ளே இருப்பவர்களே நிரப்பிவிடுவார்கள். புதிதாக உருவாகும் சில வேலைகளுக்கு அடிப்படை தகுதி கூட தற்போதைய பட்ட படிப்பில் இல்லை. அதில் இந்தியா சோபிக்கவும், தமிழ்நாடு/பிற்படுத்தப்பட்ட மக்கள் பயன்பெறவும் வாய்ப்புகள் மிக மிக குறைவு. ஆக இந்தியாவில்/தமிழ்நாட்டில் வேலைகள் குறைந்து, புதிய வேலைகள் வேறு நாட்டில்/மாநிலத்தில் கூட உருவாக்கலாம்.
இது மிகப்பெரிய பொருளாதார சிக்கலை உருவாக்கும். ஏற்கனவே பிரதமர் மோடி சொன்னது போல ஒரு பெரிய வறுமைக்காலத்தை நாடும் நாமும் எதிர்நோக்கி இருக்கிறோம்.
அடுத்து என்ன செய்ய வேண்டும்?
பெற்றோர், மூத்தோர் , சமூக அக்கறை கொண்டவர் அனைவரும் தொழில்/தொழில்நுட்பம், வேலை, பொருளாதாரம் ஆகியவற்றை தொடர்ந்து கவனிக்க வேண்டும். குழுவாக செயல்பட்டு அது குறித்த தகவல்களை அதிகம் பரிமாறிக் கொள்ள வேண்டும். தான் மட்டும் ரகசியமாக வளர வேண்டும் என்ற சிந்தனையை விடுத்து செய்திகளை உறவுகளோடு பகிர்ந்து கூட்டமாக வளர முயற்சி செய்ய வேண்டும்.
இளைஞர்களிடம் எதிர்வரும் ஆபத்துகளை எடுத்து சொல்லி விழிப்புணர்வு தர வேண்டும். கடுமையாக உழைக்கவும், நல்ல வேலை தொழில் கிடைக்க வேண்டும் என்றால், பிற நகரங்கள், மாநகரங்கள் நோக்கி செல்லவும் தயார்படுத்த வேண்டும். சென்னை, பெங்களூரு, மும்பை போன்ற பெரு நகரங்களுக்கு சென்று வசதி குறைவான இடங்களில் தங்கி, குறைந்த செலவில் சாப்பிட்டு, கடுமையாக வேலை தேடி அலையும் மன உறுதியை கொடுக்க வேண்டும். முதல் சில ஆண்டுகளில் சம்பளத்தை விட கற்றலில் அதிக கவனம் செலுத்த வேண்டும். Communication skill ஆங்கில புலமை பழகிக் கொள்ள வேண்டும்.
இந்த வேலை/தொழில் பஞ்சாயத்தில் சம்பந்தம் இல்லாதவர்களை bore அடிக்க கூடாதே என்று கொஞ்சமாக எழுதிய வேண்டி உள்ளது. (இதுவே கொஞ்சமா என்று யாரும் அதிர்ச்சி அடைய வேண்டாம் 😊 )
தற்போது வேலை தேடுபவர்கள் அல்லது கல்லூரி படிக்கும் பிள்ளைகளின் எதிர்காலம் பற்றி அக்கறை உள்ள பெற்றோர், ஆர்வலர்கள் ஆகியோருக்கு மட்டும் சென்று சேரும் படி ஒரு தளம் உருவாக்க வேண்டும். விரைவில் சொல்கிறேன்.