02/09/2026
புதுச்சேரி அரசு, மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பாக, பிரதம மந்திரி மத்ஸ்ய சம்பதா யோஜனா (PMMSY) திட்டத்தின் கீழ் மீன்வள உள்கட்டமைப்பு வசதிகளை தொடங்கி வைத்தல் மற்றும் நீலப் பொருளாதாரத்திற்கான கூட்டுறவு சார்ந்த கடல்பாசி வளர்ப்பு குறித்து பன்முகத்திறன் மேம்பாட்டு மாநாடு துவக்கவிழா, புதுச்சேரி கருவடிக்குப்பத்தில் அமைந்துள்ள பெருந்தலைவர் காமராஜர் மணிமண்டபத்தில் இன்று (01.09.2026) காலை 11.00 மணியளவில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில், புதுச்சேரி அரசு மீன்வளத்துறை செயலர் டாக்டர். D. மணிகண்டன், இ.ஆ.ப., அவர்கள் வரவேற்புரை ஆற்றினார். மாண்புமிகு முதலமைச்சர் திரு. ந. ரங்கசாமி அவர்கள் சிறப்புரையும், மாண்புமிகு துணைநிலை ஆளுநர் திரு. K. கைலாஷ்நாதன் அவர்கள் தலைமையுரையும் ஆற்றினர். மேலும், இந்நிகழ்ச்சியில், இந்திய அரசின் மாண்புமிகு மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை இணை அமைச்சர் பேராசிரியர் சத்ய பால் சிங் பாகேல் அவர்களும் மற்றும் இந்திய அரசு மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை மாண்புமிகு ஒன்றிய அமைச்சர் திரு. ராஜீவ் ரஞ்சன் சிங் அவர்களும் கலந்து கொண்டு மத்திய அரசின் பிரதம மந்திரி மீன்வள மேம்பாட்டு திட்டத்தின் கீழ்காணும் பல்வேறு மீன்வள உட்கட்டமைப்புகளை துவக்கி வைத்தனர்.
1. புதுச்சேரி, தேங்காய்திட்டில் ரூ. 15.63/- கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்பட்ட சிந்தனை சிற்பி டாக்டர் சிங்காரவேலர் மீன்பிடித் துறைமுகம்.
2. புதுச்சேரி, நல்லவாடு பகுதியில் ரூ.18.93 கோடியில் புதிதாக கட்டப்பட்டுள்ள மீன் இறங்குதளம் (Fish Landing Center).
3. காரைக்கால், காளிக்குப்பத்தில் ரூ.1.92 கோடியில் ஏற்படுத்தப்பட்டுள்ள கடல்பாசி பதப்படுத்துவதற்கான மேம்பட்ட புத்தாக்க மற்றும் திறன் மேம்பாட்டு மையம் (ACICD).
இந்நிகழ்ச்சியில், மாண்புமிகு சட்டப்பேரவை தலைவர் திரு. A. அன்பழகன் அவர்கள்,மாண்புமிகு உள்துறை அமைச்சர் திரு. A. நமச்சிவாயம், அவர்கள், மாண்புமிகு குடிமை பொருள் வழங்கல்துறை அமைச்சர் திரு. V.P. சிவக்கொழுந்து அவர்கள், மாண்புமிகு நாடாளுமன்ற உறுப்பினர் (மாநிலங்களவை) திரு. S.செல்வகணபதி அவர்கள், மற்றும் மாண்புமிகு சட்டமன்ற உறுப்பினர்கள் தலைமைச் செயலர் டாக்டர் சரத் சவுகான், I.A.S., அவர்கள், இந்திய அரசின் மீன்வளத்துறை செயலர் டாக்டர் அபிலாஷ் லிக்கி I.A.S., அவர்கள், ஆகியோர் இவ்விழாவில் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
மேலும், இந்நிகழ்ச்சியில் புதுச்சேரி மற்றும் காரைக்கால் மீனவ கிராம பஞ்சாயத்தார், மீன்பிடி படகு உரிமையாளர்கள் சங்கத்தின் பிரதிநிதிகள், மீனவர் / மீனவமகளிர் கூட்டுறவு சங்க நிர்வாக பிரதிநிதிகள் மற்றும் மீனவர் சமுதாயத் தலைவர்கள் ஆகியோர் இவ்விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தனர். நிறைவாக, மீன்வளத்துறை இயக்குநர், திரு. A. முகமது இஸ்மாயில், அவர்கள் நன்றியுரை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியினைத் தொடர்ந்து மதிய வேலையில் கடற்பாசி வளர்ப்பு மூலமாக, மீனவ மகளிருக்கு மாற்று வாழ்வாதார வாய்ப்புகளின் நன்மைகளையும், தொழில் நுட்பஉட்கூறுகளையும், மதிப்பு கூட்டப்பட்ட கடற்பாசிகளின் சந்தை வாய்ப்புகளைபற்றியும், கூட்டுறவு தொழில் முறைகளையும் குறித்து, மத்திய மீன்வள ஆராய்ச்சி நிறுவனங்களுடன் இணைந்து, புதுச்சேரி மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை, புதுச்சேரி மற்றும் காரைக்கால் மீனவ மகளிர்க்கு பயிலரங்கம் நடத்தப்பட்டது.
புதுச்சேரி அரசு, மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பாக, பிரதம மந்திரி மத்ஸ்ய சம்பதா யோஜனா (PMMSY) திட்டத்தின் கீ....