கல்லூரி மாணவர் சேவை மையம்

  • Home
  • India
  • Madurai
  • கல்லூரி மாணவர் சேவை மையம்

கல்லூரி மாணவர் சேவை மையம் கல்விக்கடன் பெற்று படிக்க விரும்பு ம

25/02/2023

மதுரை மாநகரில் பயிலும் +2 மாணவர்கள் கவனத்திற்கு

வங்கி கடன்/ நல்ல மதிப்பெண் பெறும் மாணவர்களுக்கு ஊக்கத் தொகை/சிறந்த கல்லூரிகளில் சேர வாய்ப்பு/ பொருளாதாரத்தில் பின் தங்கிய மாணவர்களுக்கு சிறப்பு சலுகைகள்

எல்லாம் ஒரே இடத்தில் !

மதுரை காந்தி மியூஸத்தில் நியூஸ் 7 தமிழ் நடத்தும் மாபெரும் கல்வி கண்காட்சி

உடனே பங்கெடுத்து பயன்பெறுங்கள்

அனுமதி இலவசம் !

கலந்து கொள்ளும் மாணவர்களுக்கு நிச்சய பரிசுகள் !

தேதி - 26/02/23
நாள் - ஞாயிற்றுக்கிழமை

நேரம் - காலை 10 மணி முதல்

25/02/2023
07/05/2017

B.Ed கல்லூரிகளுக்கு பல்கலை எச்சரிக்கை

`பேராசிரியர்கள் நியமனத்துக்கு தகுதி ஒப்புதல் பெறாத, கல்லுாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்' என, கல்வியியல் பல்கலை எச்சரித்துள்ளது.
தமிழகத்திலுள்ள, பி.எட்., கல்லுாரிகளில், பேராசிரியர்கள், கல்லுாரி முதல்வர்களை நியமிக்க, பல்கலையிடம் தகுதி ஒப்புதல் பெற வேண்டும்.
கடந்த கல்வியாண்டில், தகுதி ஒப்புதல் பெறாமல், பல கல்லுாரிகள், பேராசிரியர்களை நியமித்துள்ளன.
இந்த கல்லுாரிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு
உள்ளது.

இது குறித்து, தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலை பதிவாளர் ரவீந்திரநாத் வெளியிட்ட அறிவிப்பில், 'மே, 15க்குள், புதிய பணி நியமனங்களுக்கு, தகுதி ஒப்புதல் பெற வேண்டும். இல்லாவிட்டால், வரும் கல்வி ஆண்டில், மாணவர் சேர்க்கைக்கு அனுமதி வழங்கப்படாது' என, தெரிவித்து உள்ளார்.`

தொலைதூரக் கல்வி தேர்வுக்கு மே 10 வரை விண்ணப்பிக்கலாம்: சென்னை பல்கலை. அறிவிப்பு.`தொலைதூரக் கல்வி தேர்வுக்கு மே 10 வரை வி...
07/05/2017

தொலைதூரக் கல்வி தேர்வுக்கு மே 10 வரை விண்ணப்பிக்கலாம்: சென்னை பல்கலை. அறிவிப்பு.

`தொலைதூரக் கல்வி தேர்வுக்கு மே 10 வரை விண்ணப்பிக்கலாம்: சென்னை பல்கலை. அறிவிப்பு.
சென்னை பல்கலைக்கழக பதிவாளர் (பொறுப்பு) எஸ்.கருணாநிதி நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்ப தாவது:
மே, ஜூன் மாதம் நடைபெறவுள்ள தொலைதூரக் கல்வி நிறுவன படிப்புகளுக்கான (இளங்கலை, முதுகலை, டிப்ளமா, சான்றிதழ் தேர்வுகளுக்கு) ஆன்லைனில்``` (www.ideunom.ac.in)``` அபராத கட்டணம் செலுத்தி விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் மே 10-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது`

29/04/2017

#மாணவ_மாணவியர்கள்_கல்வி_கடனுக்காக இனி வங்கி வாசலில் காத்திருக்க வேண்டியதில்லை.

மத்திய அரசின் இந்த புதிய உத்தரவை தெரிந்து கொள்ளுங்கள்

பொறியியல், மருத்துவம் பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்புகளுக்கு கடன் பெற இனி வங்கி வாசலில் மாணவர்கள் தங்கள் பெற்றோருடன் கால்வலிக்க காத்திருக்க வேண்டாம்.

அதற்கு பதிலாக கல்விக்கடனுக்காகவே ‘பிரதமர் வித்யா லட்சுமி கார்யகிரம்’ எனும் இணையதளத்தை மத்திய அரசு உருவாக்கியுள்ளது. இந்த தளத்தில் மூலமே இனி அனைத்து கல்விக்கடனுக்கான விண்ணப்பங்களும் அனுப்பப்பட வேண்டும். மாறாக எந்த வங்கியும் தனிப்பட்ட முறையில் கல்விக்கடனுக்கான விண்ணப்பங்களை பரிசீலிக்க தேவையில்லை என உத்தரவிடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக கடந்த 21-ந்தேதி மத்திய நிதி அமைச்சகம் அனைத்து அரசு வங்கிகளுக்கும், நிதி நிறுவனங்களுக்கும் உத்தரவிட்டுள்ளது.

அனைத்து கல்விக்கடன்களுக்கான விண்ணப்பங்களையும், ‘பிரதமர் வித்யா லட்சுமி கார்யகிரம்’ எனும் இணையதளம் வாயிலாகவே பரிசீலனை செய்ய வேண்டும் என ஆணையிட்டுள்ளது.
ஆதலால், இனிமேல், 12-வகுப்பு முடித்த வசதியில்லா ஏழை மாணவ, மாணவிகள் பொறியல், மருத்துவ படிப்புக்கும், பட்டமேற்படிப்புகள் படிக்க கடன் பெற வங்கியில் வரிசையில் நிற்க வேண்டிய அவசியம் இல்லை.

இந்த ‘பிரதமர் வித்யா லட்சுமி கார்யகிரம்’ எனும் இணையதளத்தில் சென்று, அதில் உள்ள கல்விக்கடனுக்கான விண்ணப்பத்தில் உள்ள விவரங்களை பூர்த்தி செய்து, எந்த வங்கி மூலம் கல்விக்கடன் வேண்டும் என்ற தகவலையும் தெரிவித்து அதை அனுப்பிவைக்க வேண்டும்.
விண்ணப்பங்கள் முறைப்படி பரிசீலனைக்கு உட்படுத்தப்பட்டு, கல்விக்கடன் குறித்த அழைப்பு வங்கி மூலம் சம்பந்தப்பட்ட மாணவருக்கு கடிதமாக அனுப்பப்படும். இந்த திட்டம் இந்த ஆண்டில் இருந்து செயல்பாட்டுக்கு வந்துள்ளது.

“ ‘பிரதமர் வித்யா லட்சுமி கார்யகிரம்’
https://www.vidhyalakshmi.co.in எனும் இணையதளத்தின் மூலமே அனைத்து கல்விக்கடன்களுக்கான விண்ணப்பங்களும் பரிசீலிக்கப்பட வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது.

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள "Central Sheep and Wool Research Institute"-இல் நிரப்பப்பட உள்ள பணியிடங்களுக்கு விவசாயம் மற்ற...
20/12/2016

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள "Central Sheep and Wool Research Institute"-இல் நிரப்பப்பட உள்ள பணியிடங்களுக்கு விவசாயம் மற்றும் கால்நடை அறிவியல் துறையில் பட்டம் பெற்றவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விளம்பர எண்: CSWRI/08/2016
பணி: Senior Research Fellow - 01
பணி: Field Assistant (Veterinary) - 01
பணி: Field Assistant (Agricultural) - 01
தகுதி: Agricultural Extension, Veterinary Extension, Dairy Extension, Fisheries Extension, Home Science Extension, B.V.Sc. & A.H., Agriculture போன்ற துறைகளில் பட்டம் மற்றும் முனைவர் பட்டம் அல்லது நெட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானர்கள்.
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 27.12.2016
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.cswri.res.in என்ற இணையதளத்தை பார்த்து தெரிந்துகொள்ளவும்

21/10/2016

வடக்கு மத்திய ரயில்வேயில் 2016 - 2017-ஆம் ஆண்டிற்கான 21 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கு தகுதியான விளையாட்டு வீரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 21
தகுதி: 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.1,900
வயதுவரம்பு: 18 - 35க்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: http://www.ncr.indianrailways.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய என்ற இணையதளத்தை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

21/10/2016

தருமபுரி: பெரியார் மன்றத்தில் வரும் அக்டோபர் 21ஆம் தேதி 108 ஆம்புலன்ஸில் பணியாற்ற மருத்துவ உதவியாளர் மற்றும் ஓட்டுநர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது.

இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் கே. விவேகானந்தன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
மருத்துவ உதவியாளர் பணியிடத்துக்கு, பி.எஸ்ஸி நர்சிங், விலங்கியல், தாவரவியல், உயிர் வேதியியல், உயிரியல் உள்ளிட்ட அறிவியல் படிப்புகள் அல்லது செவிலியர் படிப்புகள், மருந்தாளுநர், பரிசோதனை நுட்புநர் உள்ளிட்ட படிப்புகளை முடித்த ஆண், பெண் இரு பாலரும் இந்த முகாமில் பங்கேற்கலாம்.
எழுத்துத் தேர்வு, மருத்துவ நேர்முகம், மனிதவளத் துறை நேர்முகம் ஆகியவற்றின்படி தேர்வு செய்யப்படுவோருக்கு 50 நாள்கள் முழுமையான பயிற்சி அளிக்கப்படும். பயிற்சிக் காலத்தில் தங்கும் வசதி மற்றும் தினசரி உணவுப் படியாக ரூ. 100 வழங்கப்படும்.
ஓட்டுநர் பணியிடத்துக்கு குறைந்தபட்சம் 10 ஆம் வகுப்பில் தவறியவர்கள், தேர்ச்சி பெற்றவர்கள் 23 முதல் 35 வயதுக்கு மிகாத ஆண்கள் தேர்வு செய்யப்படுவர். 162.5 செ.மீ. உயரம், இலகுரக வாகன ஓட்டுநர் உரிமம், பேட்ஜ் பெற்றிருக்க வேண்டும்.
இந்தத் தகுதிகளைக் கொண்டோர் தங்களது அசல் சான்றிதழ்களுடன் நேரில் வர வேண்டும். மாத ஊதியம் ரூ. 11,100. தேர்வு செய்யப்படுவோருக்கு அன்றைக்கே பணிநியமன ஆணை வழங்கப்படும்.
முகாமில் பங்கேற்க வருவதற்கான படிகள் ஏதும் வழங்கப்பட மாட்டாது. மேலும் விவரங்களுக்கு 73974 44158, 73977 24804 ஆகிய செல்லிடப்பேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

21/10/2016

அரசு பொறியியல் கல்லூரி உதவிப் பேராசிரியர்கள் பணிக்கான எழுத்துத் தேர்வு சென்னை மாவட்டத்தில் உள்ள 14 மையங்களில் அக்டோபர் 22-ஆம் தேதி (சனிக்கிழமை) நடைபெற உள்ளது.

ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் அரசு பொறியியல் கல்லூரி உதவிப் பேராசிரியர் பணிக்கு போட்டி எழுத்துத் தேர்வு நடத்தி, தேர்வு செய்யப்படவுள்ளனர்.
அதனால் இந்தத் தேர்வு நடைபெறும் மையத்துக்குள் தேர்வர்கள் செல்லிடப்பேசி, இதர உபகரணங்கள் எடுத்துச் செல்ல அனுமதி கிடையாது. மேலும், காவல் துறை, அலுவலர்கள் ஆகியோரின் சோதனைக்குப் பின்னரே தேர்வு மையத்துக்குள் அனுமதிக்கப்படுவர்.
இதற்கான நுழைவுச் சீட்டுகளை ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் இருந்து தேர்வர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும், அந்தச் சீட்டில் புகைப்படம் பதியவில்லையென்றால் இணைப்பு படிவத்தை நிறைவு செய்து புகைப்படம் ஒட்டப்பட்டு அரசிதழ் பதிவுப் பெற்ற அலுவலரின் கையொப்பம் பெற்று எடுத்து வருவது அவசியம் ஆகும்.
இந்தத் தேர்வு மேலே குறிப்பிட்ட நாளில் 14 மையங்களில் காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரையில் நடைபெற உள்ளது. தேர்வு எழுதும் தேர்வர்கள் அனைவரும் தவறாமல் காலை 8.30 மணிக்கு தேர்வு மையத்துக்கு வரவும், ஆசிரியர் தேர்வு வாரியத்தின் அறிவுரைகளை கட்டாயம் பின்பற்றவும் என மாவட்ட ஆட்சியர் ப.மகேஸ்வரி தெரிவித்துள்ளார்.

21/10/2016

சிண்டிகேட் வங்கியில் நிரப்பப்பட உள்ள Temporary Attender பணிக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Temporary Attender
தகுதி: 10-ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
காலியிடங்கள்: 37
வயது வரம்பு: 18 வயதிலிருந்து 26 வயதுக்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதிவாய்ந்த நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
The Assistant General Manager,
Syndicate Bank, Regional Office,
Personnel Cell, Pawan Commercial complex,
Daba Gardens Main Road, 2nd floor,
Visakhapatnam - 530020.
விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 22.10.2016
மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://www.syndicatebank.in/english/Career.aspx என்ற இணையதளத்தைப் பார்த்து தெரிந்துகொள்ளவும்.

21/10/2016

இந்தியன் வங்கியின் துணை வங்கியான Indbank-ல் 2016-2017-ஆம் ஆண்டிற்கான 20 உதவி துணை தலைவர், செயலக அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிறுவனம்: Indbank Merchant Banking Services Limited (Indbank)
மொத்த காலியிடங்கள்: 20
பணி: Assistant Vice President (Company Secretary) - 01
வயதுவரம்பு: 31.08.2016 தேதியின்படி 45க்குள் இருக்க வேண்டும்.
பணி: Secretarial Officer (Dealer) - 19
வயதுவரம்பு: 31.08.2016 தேதியின்படி 35க்குள் இருக்க வேண்டும்.
பணி இடம்: சென்னை, சேலம், கோவை, ஹைதராபாத், பெங்களூர், மும்பை மற்றும் கொல்கத்தா
தேர்வு செய்யப்படும் முறை: தகுதியான விண்ணப்பங்கள் தேர்வு செய்யப்பட்டு அதிலிருந்து தகுதியானவர்களுக்கு நேர்முகத் தேர்வு நடத்தப்படும். அதிலிருந்து தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 31.10.2016
மேலும் முழுமையான விவரங்கள் அறியhttp://corporate.indbankonline.com/Detailed%20Advertisement%20for%20recruitment%202016-17.pdf என்ற இணையதள லிங்கை கிளிக் செய்யவும்.

Address

Anna Nagar
Madurai
625020

Telephone

90 43 146 156

Website

Alerts

Be the first to know and let us send you an email when கல்லூரி மாணவர் சேவை மையம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to கல்லூரி மாணவர் சேவை மையம்:

Share