19/07/2025
#க்ஷத்ரிய_சிகாமணி_இராஜராஜசோழன்_1040_ஆம்_ஆண்டு_முடிசூட்டுநாள்_விழா🙏🔥🙏
க்ஷத்ரிய சிகாமணி, சிவபாதசேகரன், திருமுறை கண்ட சோழன், மும்முடி சோழகன், மாமன்னன் ஸ்வஸ்தி ஶ்ரீ இராஜராஜசோழ சக்கரவர்த்திகள் ஆடி புனர்பூச நன்னாளில் தில்லையில் திருமுடி சூடியதன் 1040 ஆம் ஆண்டு விழா இரண்டாம் ஆண்டாக வெகு விமரிசையான முறையில் கொண்டாடப் படவுள்ளது என்பதை மகிழ்வோடு தெரிவித்து கொள்கிறோம்.
வருகின்ற ஜூலை 24 வியாழக்கிழமையன்று காலை 8 மணியளவில் சோழர் குல முதல்வன் பேரரசன் இரண்யவர்ம சோழன் கட்டி எழுப்பிய சோழர்களின் குலதெய்வ கோயிலான சிதம்பரம் நடராஜர் பெருங்கோயிலில் துவங்கும் விழாவானது "தூய தமிழ்நாடு காத்த பெருமான்" கோப்பெருஞ்சிங்க பல்லவன் கட்டி எழுப்பிய தில்லை காளியம்மன் திருக்கோயிலில் மதியம் 2 மணியளவில் நிறைவு பெறவுள்ளது.
#நிகழ்ச்சி_நிரல்:
1) நடராஜர், அம்பாள், சூரியர், சந்திரர் சிறப்பு அலங்காரம் அர்ச்சனை மற்றும் ஸ்படிக லிங்கத்திற்கு அபிஷேக ஆராதனை வழிபாடு.
2) சோழ இளவரசர்,
இராஜவன்னிய ராஜஶ்ரீ
ஆசி. மன்னர் மன்னன் சூரப்ப சோழகனார் அவர்களுக்கு
தில்லை வாழ் அந்தணர் பட்டாலான பரிவட்டம் சூட்டுதல்.
3) விழாவில் கலந்துகொள்ளும் க்ஷத்ரிய சொந்தங்களுக்கு
பரிவட்டம் சூட்டி, மாலை அணிவித்து கௌரவித்தல்.
4) நாதஸ்வர மேலதாளங்கள்,
கைலாய வாத்தியங்கள் வான் அதிர, சாதிப்பிள்ளைகள் வன்னியகுல க்ஷத்ரியர் தம் புகழ் பாட, அரசர் வேடம் தரித்த தெருக்கூத்து கலைஞர்கள் அணிவகுக்க, நூற்றுக்கணக்கான க்ஷத்ரிய சொந்தங்கள் மாலையும் கழுத்துமாய் புடைசூழ ராஜவீதிகள் வழியாக மாமன்னர் இராஜராஜசோழன் திருமேனி வீதியுலா தில்லை காளியம்மன் ஆலயம் சென்றடைதல்.
5) போர் தெய்வமாம் தில்லை காளியம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள்.
6) காலாஞ்சி வழங்குதல்.
7) அன்னதானம் வழங்குதல்.
வெளியூர் சொந்தங்கள் முதல்நாள் இரவு தங்க, மண்டப வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
உலகெங்கும் மேவி வாழும் க்ஷத்ரிய சொந்தங்கள் யாவரும் இவ்வரலாற்று பெரு நிகழ்வில் குடும்பம் சகிதம் கலந்து கொண்டு ஆனந்த கூத்தன் ஆடவல்லான் உலகளந்தான் சோழர் குலக் காவலன் தில்லை நடராஜப் பெருமான் திருவருளும் தில்லை காளியம்மன் திருவருளும் கிடைக்கப் பெற்றிட வாருங்கள்...!
முன்னோரை போற்றி வணங்குதல் அன்றி வேறு பரிகாரம் ஏதேனும் உண்டோ இக்கலியுக க்ஷத்ரிய பெருமரபிற்கு...!
#ஒருங்கிணைப்பு:
க்ஷத்ரிய சிகாமணி முடிசூட்டுநாள் விழாக்குழாம் ~ 9791360633