Tenkasi dist second sales item

Tenkasi dist second sales item sell or buy any item or used item

13/02/2026

"வயதான காலத்தில் கோடிக்கணக்கில் பணத்தை வைத்துக்கொண்டு இருந்து என்ன பலன்?" என பலர் கேட்பதுண்டு.

அவர்கள் என்ன கோடிக்கணக்கில் பணத்தை வங்கியில் போட்டுவைத்துக்கொண்டு சும்மாவா இருக்கிறார்கள்? பூர்வீக வீடு, நிலம்னு அவர்கள் இருக்கும் சொத்தின் மதிப்பு ஏறியிருக்கும். 60 வயதில் ஓய்வுபெறுகையில் இருந்த போர்ட்போலியோ மதிப்பு, 70 வயதிற்கு மேல் பல மடங்கு உயர்ந்திருக்கலாம். அப்ப அவர்களுக்கு நிஜமாகவே உடம்பு முடியாமல் போயிருக்கலாம்.

அமெரிக்காவில் நர்சிங் ஹோம் எனும் முதியோர் பராமரிப்பு மையத்தில் தன் தந்தையைச் சேர்த்த ஒருவர் சொன்னார்:

"அங்கே எல்லாம் ஆண்டுக்கு ஒரு நபருக்கு இந்திய மதிப்பில் ரூ. 90 லட்சம் முதல் 1 கோடி ரூபாய் வரை வாங்குவார்கள். அங்கே வேலை செய்பவர்கள் எல்லாம் குறைந்த ஊதியத்தில் வேலை செய்யும் இளைஞர்கள். முதியோரை உணர்வுப்பூர்வமாகக் கையாள்வது எப்படி என்றே அவர்களுக்குத் தெரியாது. சும்மா கைவலி, கால்வலி என்றால் பெயின்கில்லரை கொடுத்துவிடுவார்கள். தூக்கம் வரலையா? பிடி தூக்கமாத்திரையை!

முதியவர்கள் டோனட், பீட்சா, கேக்னு எதை கேட்டாலும் கொடுப்பார்கள். நம்ம வீடாக இருந்தால் திட்டுவோம், 'உடம்புக்கு ஆகாது' என்போம். அங்கே அதெல்லாம் கிடையாது. அங்கே போனால் அவர்களுக்குத் தேவை நீங்கள் நீண்ட நாள் அங்கே ஆரோக்கியமாக உயிர்வாழ வேண்டும் என்பதெல்லாம் இல்லை; அவர்களைத் தொந்தரவு செய்யாமல் இருக்க வேண்டும், அவ்வளவுதான். அங்கே சேர்ந்து நாலைந்து ஆண்டுகளுக்கு மேல் உயிர்வாழ்பவர்கள் எண்ணிக்கை மிகக் குறைவு. டிமாண்ட் அதிகம், வெயிட்டிங் லிஸ்ட் வேறு உண்டு. ஒருவர் சீக்கிரம் 'போய் சேர்ந்தால்' அந்த இடத்திற்கு அடுத்தவர் வருவார். நிறுவனத்திற்கும் லாபம், சில பிள்ளைகளுக்கும் பாரம் குறையும் எனும் மாடலில்தான் பல இடங்கள் இயங்குகின்றன."

இதுகுறித்து FIRE வாட்ஸாப் குழுவில் நான் எழுதியது:

வயதான காலத்தில் நிறைய சொத்தையும் காசையும் சேர்த்து வைத்துக்கொள்ளுங்கள். ஆண்டுக்கு ரூ. 90 லட்சத்தை ஏதோ ஒரு முதியோர் இல்லத்திற்கு தூக்கிக் கொடுப்பதை விட, உங்கள் வீடு, பங்குகள், சொத்து என உங்கள் பிள்ளைகளிடம் கொடுத்து உங்களைப் பார்த்துக்கொள்ளச் சொல்லலாம். எடுத்தவுடனேயே மொத்த காசையும் கொடுத்துவிட வேண்டாம். உங்கள் பராமரிப்புக்குத் தேவையானதை வைத்துக்கொண்டு, அவர்களுக்கு ஒரு பகுதியைத் தரலாம். உங்கள் காலத்திற்குப் பிறகு நீங்கள் இருக்கும் வீடு மற்றும் இதர சொத்துக்கள் அவர்களுக்குப் போகுமாறு செய்தால் போதும்.

பலரும் "என் பிள்ளைகள் என்னை கவனிக்க வேண்டிய அவசியம் இல்லை, நான் சொந்தக் காலில் நிற்பேன்" என்று வீராவேசமாகப் பேசுகிறார்கள். ஆனால், முதுமையில் நிதி மோசடிகளில் சிக்குவது (Financial scams), டிமென்ஷியா (Dementia) போன்ற மறதி நோய்கள் வருவது போன்ற எதார்த்தங்களை அவர்கள் யோசிப்பதில்லை. குடும்பம் என்ற அமைப்பின் நோக்கமே ஒருவருக்கொருவர் துணையாக இருப்பதுதான்.

பணம் இல்லாவிட்டாலும் பெற்றோரைப் பார்த்துக்கொள்வது பிள்ளைகளின் கடமை என்றாலும், நாம் அவர்களுக்கு ஒரு நிதிச் சுமையாக (Financial burden) மாறிவிடக்கூடாது. அதேசமயம், பிள்ளைகளுக்குத் திருமணமாகிவிட்டால் அவர்களைத் தனிக்குடித்தனம் அனுப்பிவிடுங்கள். உங்களால் உங்கள் காரியங்களைச் செய்துகொள்ள முடியாத ஒரு காலம் வரும்போது மட்டும், அவர்கள் உதவி செய்தால் போதும்

~ நியாண்டர் செல்வன்

13/02/2026
குற்றாலத்தில் நடமாடும் பாஸ்போர்ட் சேவை:மதுரை மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தின் கீழ் 2 பாஸ்போர்ட் சேவை மையங்களும் (மதுரை, நெல...
08/02/2026

குற்றாலத்தில் நடமாடும் பாஸ்போர்ட் சேவை:

மதுரை மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தின் கீழ் 2 பாஸ்போர்ட் சேவை மையங்களும் (மதுரை, நெலாலை), 8 தபால் நிலைய பாஸ்போர்ட் சேவை மையங்களும் செயல்பட்டு வருகின்றன.

பாஸ்போர்ட் சேவையை விரிவு செய்யும் பொருட்டும், தொலை தூர பகுதிகளில் வசிக்கும் குடிமக்களுக்கு பாஸ்போர்ட் சேவையை வழங்க வேண்டும் என்ற நோக்கத்துடனும், வெளியுறவு துறை அமைச்சகமானது நடமாடும் பாஸ்போர்ட் அலுவலக சேவையை அறிமுகப்படுத்தியது.

அடுத்த 3 மாதங்களில் நடமாடும் பாஸ்போர்ட் அலுவலக சேவையை பல இடங்களில் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி வருகிற 10, 11-ந்தேதிகளில் தென்காசி மாவட்டம் குற்றாலம் போலீஸ் நிலைய வளாகத்தின் அருகில் வைத்து நடமாடும் பாஸ் போர்ட் சேவை நடைபெற உள்ளது. இதில் பாஸ்போர்ட் விண்ணப் பத்தினை சமர்ப்பிப்பதற்கு ஆன்லைனில் முன்பதிவு செய்ய வேண் டும். இதற்கென ஆன்லைனில் முன்பதிவு செய்யும்போது பாஸ்போர்ட் கட்டணத்தை செலுத்தி லொகேஷன் என்ற இடத்தில் உள்ள ஆர். பி.ஓ.மொபைல் வேன் குற்றாலம் என்பதை தேர்வு செய்து முன்பதிவு தேதியை பெற வேண்டும். முன்பதிவு செய்து தேர்ந்தெடுத்த நாளில், அனுமதி சீட்டில் கொடுக்கப்பட்ட இடத்திற்கு குறிப்பிட்ட நேரத்தில் உரிய ஆவணங்களுடன் நேரில் வந்து விண்ணப்பத்தினை சமர்ப் பிக்கலாம்.

இந்த தகவலை மண்டல பாஸ்போர்ட் அலுவலர் வசந்தன் தெரிவித்துள்ளார்.

31/01/2026

நம் தமிழ்நாடு
ஒரு வருடத்துக்கு
ஒரு லட்சம் இன்ஜினியர்களை தயார் செய்கிறது.

இந்தியாவின் மொத்த இன்ஜினியர்கள் தயாரிப்பில்
17 % தமிழ்நாட்டு இன்ஜினியர்கள் மட்டுமே...

இதில்லாமல் இன் ஜினியருக்கு இணையான படிப்புகளை கணக்கிட்டால்

தமிழ்நாடு வருடத்துக்கு 2 லட்சம் பொறியியல் திறனாளிகளை தயார் செய்கிறது.

அப்படியானால் தமிழ்நாட்டின் அடையாளம் எது ?

அறிவியல் தொழில்நுட்பம் பகுத்தறிவுதான்.

இன்னமும் குடியரசு தின விழாவில் ஜல்லிகட்டு காளைகளை பிடித்து வருவதை காட்டிக் கொண்டே இருப்பதில் என்ன பெருமை இருக்கிறது தெரியவில்லை.

இன்று காலையில் பழைய பைக் ஒன்றில் ஒரு இளம் குடும்ப தலைவர் வண்டியோட்ட, பின்னால் அமர்ந்திருந்த இளம் அம்மா, தன் ஆறு வயது பெண் குழந்தையை மடியோடு இறுக்க அணைத்து ஒரு புத்தகத்தை வைத்து சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்த காட்சியைப் பார்த்தேன்.

அப்பா அம்மாவின் நகரும் பைக்கின் பின்னால் அமர்ந்து படிக்கும் குழந்தைகளை பார்த்திருக்கிறேன்.

ஆனால் நகரும் பைக்கில் தன் குழந்தைக்கு பாடம் சொல்லிக் கொடுத்துக் கொண்டே போகும் அம்மாவை இன்றுதான் பார்க்கிறேன்.

தமிழ்நாட்டு மக்கள் கல்வியில் இவ்வளவு ஆர்வமாக ஈடுபட்டுக் கொண்டிருக்க இன்னமும் தமிழ்நாட்டின் அடையாளமாக சல்லிக்கட்டு, பனை மரம் ஏறுதல், கரும்பை கடித்து தின்னல், வேட்டி, கோலம், பொங்கல் என்று டூமச்சாக ஸீனைப் போடுவது அவசியமில்லாத ஒன்றாகவே படுகிறது.

இந்த முறை எல்லாம் ஒவ்வொரு கல்லூரிகளும் பள்ளிகளும் அலுவலகங்களும் காட்டிய பொங்கல் செலிபிரேசன்ஸ் அளவுக்கு அதிகமான ஸீனைப் போடுவதாக இருந்தது.

அதிலும் பார்ப்பவர் எல்லாம் வேட்டிக் கட்டிக் கொண்டு திரிந்தது மேலும் கடுப்பேற்றியது.

பல ஆண்டுகாலம் படித்து முன்னேறி வேட்டியில் இருந்து பேண்ட் ஷர்ட்டுக்கு வந்தால், திரும்பவும் வேட்டி வேட்டி என்ற அந்த டூமச் அலட்டல் என்ன? கர்வம் என்ன?

வீட்டில் வாஷ்பேசின் இருக்கும் போது அதில்தானே முகம் கழுவி பிரஷ் செய்வோம்.

சொம்பில் தண்ணீர் மொண்டு வாய் கொப்பளித்து தரையில் துப்பும் போது அந்த நீர் காலெல்லாம் படும். சிறு வயதில் இப்படித்தான் நான் தினமும் பிரஷ் செய்வேன். செம எரிச்சலாய் வரும். சென்னை வந்து வாஷ் பேசின் வந்த பிறகுதான்” எவ்வளவு அருமையான அறிவியல் கண்டுபிடிப்பு இது’ என்று வாஷ்பேசினை புகழ்வேன்.

நான் வருடத்துக்கு ஒருமுறை மட்டும் ஏன் வாஷ்பேசினை விட்டு தரையில் வாய்கொப்பளித்து துப்ப வேண்டும் என்கிறேன். நான் ஏன் வருடத்துக்கு ஒருமுறை வேட்டி கட்ட வேண்டும் என்கிறேன் ? இந்த திடீர் வேட்டி மோஸ்தரின் பின்னால் ஏதோ ஒரு வியாபார யுத்திதான் தெரிகிறது.

அதே சமயம் மூட்டப்பட்ட காட்டன் லுங்கி சொல்கிறீர்களா? அது ஆண்களுக்கு வசதி. உள்ளாடை போடாமல் லுங்கி கட்டுவது ஆண்களில் ஆணுறுப்பு சார்ந்த இடங்கள் காற்றாட இருக்க மிகுந்த வசதி செய்து கொடுக்கும். லுங்கி ஒரு அறிவியல் ரீதியிலான வசதியான உடை. இப்போதும் அதை நான் அணிவேன்.
ஆனால் வேட்டியில் என்ன இருக்கிறது. ஜட்டி போடாமல் வேட்டி கட்டவே முடியாது. தூங்க முடியாது.

இளைஞர்கள் இந்த வேட்டி வெறியில் இருந்து மீள வேண்டும்.

பொங்கல் அன்று ரெண்டு பொங்கலை வைத்தோமா...ஒரு மஞ்சளை உருட்டி பிள்ளையார் செய்தோமோ, எல்லாவற்றையும் வைத்து சாமி கும்பிட்டோமோ, மதிய உணவுக்கு கூட்டுக்கறி வைத்தோமா...

மறுநாள் கறி எடுத்து தின்றோமா... அதோடு பொங்கல் முடிந்தது.

இஷ்டம் இருப்பவர் மட்டுமே காணும் பொங்கல் எல்லாம் காணச் செல்வார்கள். இப்படி அனைவரும் அல்ல...

ஆனால் இப்போதெல்லாம் ஒருவாரம் முன்னரே பொங்கல் கொண்டாடுகிறார்கள். ஒருவாரம் முன்னரே பொங்கல் கொண்டாடிவிட்டு பிறகு ஐந்து நாள் பொங்கல் லீவுக்கு ஊருக்கு போய்விடுவார்களாம்.

ஊர்ல போய் என்ன செய்வாய் ? ஊர்லையும் பொங்கல்தான் கொண்டுவேன் பாஸ்...

ஏழு கோடி மக்கள் பதினைந்து நாட்களாக பொங்கல் மூட் யில் இருந்தால் அந்த வெறி எதற்கு என்று தெரியவில்லை.

நம் ஊரில் ஐந்தாம் வகுப்பு படித்து ஆறாம் வகுப்புக்கு மொத்தம் 85 குழந்தைகள் செல்கிறதே இக்குழந்தைகளுக்கு வகுத்தல் கணக்கு தெரியுமா?

ஏழாம் வகுப்பு முடித்து இந்த மாணவர்கள் எட்டாம் வகுப்பு போகிறார்களே ஸ்கொயர் டூட் கண்டுபிடிக்க தெரியுமா...

பத்து பேர் பாலிடெக்னிக் படிக்கிறார்களே நம்ம ஊர்ல இருந்து அவர்கள் என்ன கோர்ஸ் படிக்கிறார்கள். உருப்படியாக படிக்கிறார்களா... மெக்கானிக்கல் படிக்கிறார்கள் என்றால் “டிசைன் ஆப் மெஷின் எலிமென்ட்ஸ்” பாடமெல்லாம் ஒழுங்காக படிக்கிறார்களா....

ஐந்து பேர் இன்ஜினியரிங் காலேஜ் படிக்கிறார்களே அவர்களுக்கு பீஸ் கட்ட பணம் இருக்கிறதா... இல்லாவிட்டால் ஊருக்குள் ஆளுக்கு கொஞ்சம் காசு போட்டு நாம் அந்த பீஸை கட்டலாமா...

நம் ஊரில் இடைநிற்றல் ஸ்டேஜில் பதினான்கு ஆண் மாணவர்களும், பத்து பெண் மாணவிகளும் இருக்கிறார்களே... அவர்களை எப்படி தொடர்ந்து படிக்க வைப்பது.

ஊர் பணத்தில் ஆறு நல்ல கம்யூட்டர்கள் வாங்கிப் போட்டு அதில் நல்ல AI ஆக இன்ஸ்டால் செய்து கொடுத்து, மாணவர்களுக்கு எப்படி AI யில் ஒரு விஷயத்தை தேட வேண்டும் என்கிற Prompting பயிற்சி அளிக்கலாமா...

நம்ம ஊர் பிள்ளைகளுக்கு 3D Printing அறிவு முக்கியம். ஒரு 3D பிரிண்டர் எவ்ளோ விலை... இருதாயிரமா... சரி இருக்கட்டும்...நாலு 3D Printer வாங்க ஊருக்குள் ரெண்டு பணக்காரனை ஸ்பான்ஸருக்கு பிடி... வாங்கி போடு...
3D Printing தெரிஞ்ச ஒரு ஆளை டிரைனிங் கொடுக்க சொல்லு... ஞாயிற்றுகிழமை ஞாயிற்றுகிழமை நாலு கிழமை வர அவருக்கு எவ்ளோ காசு... இருபதாயிரமா..அதையும் நாம் வசூல் செய்து கொடுப்போம்.

இப்படித்தானே ஒரு தமிழ்நாட்டின் சிற்றூர் நினைக்க வேண்டும்.

அதை விடுத்து பொங்கல் பொங்கல் பொங்கல்
வேட்டி கட்டு,

சல்லிக்கட்டு நடத்து மாட்டை விடு, மாடு முட்டி நாலு உயிர் போனாலும் போகட்டும் ஆனால் வீரமாக காட்டிக் கொள்வது முக்கியம்.

அப்புறம் தலைக்கு மேல பானையை தொங்கவிடு, கண்ணை கட்டு, தடியை கொடு, பானையை அடி... அவன் பானையை அடிக்க திணறி தடியோடு கீழே விழும் போது கைகொட்டி சிரி...

நண்பர்களே நாம் 2026 ஆம் ஆண்டிலும்
1026 ஆம் ஆண்டு காலத்தில் ராஜ ராஜ சோழன் ஆட்சி காலத்தில் இருந்த மக்கள் போல இருக்க வேண்டிய அவசியம் என்ன?

நாம் அறிவியல் கற்ற சமூகம் அல்லவா?
அந்த வித்தியாசத்தை நாம் காட்ட வேண்டும்தானே...

நம் மண்டையை எது ஆட்சி செய்ய வேண்டும் ?
அறிவியல்தானே ஆட்சி செய்ய வேண்டும்.

நாம் இன்னமும் சல்லிக்கட்டு பாரம்பரியம் பட்டுகுஞ்சம் என்று இருப்பது சரியா...

இதற்காகவா நாம் அறிவியல் கல்வி கற்றோம்...

அலுவலகத்தில் ஒருவர் ஒரு சாமி படத்தை ஒட்டி வைத்திருந்தார். அந்த சாமியின் ஒவ்வொரு உறுப்பின் அருகேவும் ஏதொ எழுதி இருந்தது.

நான் உற்று படித்தேன்.
”இந்த சாமியின் காது ஏன் பெரியது தெரியுமா... நாம் எதையும் லிசன் செய்ய வேண்டும். அதுதான் அவர் உணர்த்துகிறார்” என்றிருந்தது.

அந்த இளைஞரிடன் “நீங்க என்ன படிச்சிருக்கிங்க” என்றேன்.

‘சார் பி.ஈ எம்.பி.ஏ சார்” என்றார்.

ஒரு பி.ஈ எம்.பி.ஏ படித்த இளைஞர் எப்படி இருக்க வேண்டும்.

அவர் அப்படி அமர்ந்திருந்தால் அவரிடம் இருந்து
“அறிவு பொறி” பறக்க வேண்டாமா...

இது என்னது... இது என்னது... இதுக்கு ஆதாரம் என்னது..

”இந்த கருதுக்கோள் Research methodology இருக்கிற P test , T Test, Chi square test அப்படின்னு எல்லா டெஸ்ட்லையும் பாஸாகிட்டா... பாசாகவில்லையா... அப்போ நான் இதை நம்ப மாட்டேன்” என்று சொல்ல வேண்டாமா?

அன்றாட பேச்சில் ஆயிரம் அறிவியல்பூர்வமான டேர்ம்களை தியரிகளை அள்ளி வீச வேண்டாமா...

இந்த பத்தியைப் படிக்கும் போது கொஞ்சம் எரிச்சலாக இருக்கலாம்... ஆனால் இதை இப்படி ரா வாக எழுதவதன் காரணம்

நான் சொல்ல வருவது
“அளவுக்கதிகமான பண்டிகை மோகம் என்பது
நம் அறிவியல் சிந்தனை வீரியத்தை சிதைக்கிறது, மழுங்கடிக்கிறது.
ஏதோ ஒருவகையில் நம்மை மறுபடியும் பழங்காலத்துக்குள்ளே இழுத்து செல்கிறது.
நாம் சாஸ்திர சம்பிரதாயத்தை அறிவியல் துணை கொண்டு கேள்வி எழுப்புவதை இந்த “டூமச் பண்டிகை ஆசைகள், கொண்டாட்டங்கள்” மழுங்கடிக்கின்றன.

இந்த புரிதல் நமக்கு இருக்க வேண்டும்.

தமிழ்நாட்டின் அடையாளம் சல்லிக்கட்டு அல்ல
அது
பெண் கல்வி,
அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சி
ஏழைகள் அறிவியல் படிக்கும் வாய்ப்பு

இவைதான் தமிழ்நாட்டின் அடையாளம் என்கிற எண்ணம் நமக்கு இருக்க வேண்டும்.

31/01/2026

# # # **பலருக்கு பாடமாகிப்போன ஜப்பார் பாய் – ஒரு தொழில் பாடம்**

**1. ஆரம்ப வெற்றி**
ஜப்பார் பாய் பிரியாணி செய்வது தொடர்பான வீடியோக்கள் YouTube-இல் மிகப் பெரிய அளவில் ரசிக்கப்பட்டது.
பிரியாணியை எப்படி மிகச் சுவையாக செய்வது என்பதை, தனது தொழில் ரகசியங்களையும் கூட எந்த மறைப்பும் இல்லாமல் திறந்த மனதுடன் பகிர்ந்தார்.
இதன் காரணமாக, அவருக்கு **பல லட்சம் ரசிகர்களும் பார்வையாளர்களும்** சேர்ந்தனர்.

**2. மார்க்கெட்டிங் & வருமான உயர்வு**
YouTube புகழை தொடர்ந்து,

* அவரது பிரியாணி வியாபாரம் மிகப்பெரிய அளவில் சூடு பிடித்தது
* ஆர்டர்கள் குவிந்தன
* கணிசமான வருமானமும் கிடைக்க ஆரம்பித்தது

தமிழ்நாட்டில் கடைகள் தொடங்காமல், நேரடியாக
**சார்ஜா, துபாய், அமெரிக்கா, கனடா** போன்ற வெளிநாடுகளில் கடைகளை அதிரடியாகத் திறந்தார்.

**3. வேகமான விரிவாக்கம் (Over Expansion)**
பிரியாணி மட்டுமல்லாமல், வேறு வேறு தொழில்களிலும் ஈடுபட்டார்.
ஜப்பார் பாய் நேரடியாக தயாரிக்கும் பிரியாணியின் சுவை எப்போதும் ஒரே தரத்தில் இருந்தது.

ஆனால்,
பல நாடுகளில் உள்ள கடைகளில் பணிபுரிந்த **மாஸ்டர்களின் குளறுபடிகள்** காரணமாக

* சுவை ஒரே மாதிரி இருக்கவில்லை
* தரம் மெதுவாக குறைய ஆரம்பித்தது
* வாடிக்கையாளர்கள் குறைந்தனர்

இதன் விளைவாக, வியாபாரம் சரிவை சந்தித்தது.

**4. தொடர் சோதனைகள் & கடன் சிக்கல்**
வியாபாரத்தை மீட்டெடுக்க பல்வேறு முயற்சிகள் செய்தாலும்,
இன்று ஜப்பார் பாய் **பல கோடி ரூபாய் கடனில்** சிக்கியுள்ள நிலைக்கு வந்துள்ளார்.

**5. இதில் இருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்**

* எந்த தொழிலாக இருந்தாலும்,
**அதை சிறப்பாக செய்வது மட்டும் போதாது**
* அளவுக்கு மீறி, அகல கால் வைத்து விரிவாக்கம் செய்வது ஆபத்தானது
* ஒரு கடை நன்றாக ஓடுகிறது என்பதற்காக,
பல இடங்களில் ஒரே நேரத்தில் கடைகள் திறந்தால்
**பெரிய கோடீஸ்வரர் ஆகிவிடலாம்** என்று நினைப்பது தவறான கணிப்பு

**6. நஷ்டத்தின் உண்மை**

* இரண்டு கடைகள் நஷ்டத்தில் ஓடினாலும்
* மற்ற கடைகளில் வரும் லாபம் அதில் கரைந்து போய்
**மொத்த வியாபாரத்தையே பாதிக்கும்**

**7. முடிவு – சரியான தொழில் நெறி**

> **“விரலுக்கேற்ற வீக்கம்”** என்பதுபோல்

* வரவை அறிந்து செலவு செய்ய வேண்டும்
* அதிக கடன் அல்லது வட்டி கடன் வாங்காமல் தொழிலை நடத்த வேண்டும்
* அப்படி செய்தால்

* மன நிம்மதி இருக்கும்
* நஷ்டம் வந்தாலும் தாங்கிக் கொண்டு
* மீண்டும் எழும் சக்தி இருக்கும்

நன்றி:✍️ **– Mylai Kamaru Deen**
🙂ஜப்பார்_பாய்
#தொழில்_பாடம்
#வியாபார_அனுபவம்
#தொழில்_உண்மை
#அளவுக்கு_மீறாதே
#விரலுக்கேற்ற_வீக்கம்
#கடன்_எச்சரிக்கை
#தொழில்_நிம்மதி
#வெற்றி_தோல்வி
#வியாபார_சிந்தனை

27/01/2026

"நான் சத்ரியன்டா!"

"சத்ரியனா இருந்த நான் இனி சாணக்கியனா மாறப்போறேன்!"

"எவனாவது தொட்டுப் பாருங்கடா! தொட்ட கை உடம்புல நிக்காது!"

"உங்களையெல்லாம் கண்டதுண்டமா..."

"வீரம் விளைஞ்ச மண்ணுடா!"

இப்படியான டயலாக்குகளெல்லாம் தமிழ்த் திரைப்படங்களில் மட்டுமல்லாமல் மேடைகளிலும் முழங்கப்படும் டயலாக்குகள்! பெரும்பாலும் ஆண்ட சாதி பெருமை பேசும் திரைப்படங்களில், மேடைகளில் உச்சரிக்கப்படுபவை!

இவற்றின் மையக்கருத்து, நாங்கள் வீரமானவர்கள்! எங்கள் வீரத்துக்கு முன் மற்றவர்கள் நிற்க முடியாது என்பதை சொல்வது தான்! இப்படியான வசனத்தின் பின்னிருக்கும் உளவியல் என்னவென்று தெரியுமா?

நீங்க வீரம், சூரம்னு பேசிக்கிட்டு, கையில எதாவது ஆ*யுதத்த தூக்கிட்டு ஒருத்தனை ஒருத்தன் தலைமுறை தலைமுறையா அடிச்சுக்கிட்டு கிடக்கணும்! கல்வி, வேலைவாய்ப்பு, முன்னேற்றம் பற்றியெல்லாம் சிந்திக்கவே கூடாது... அதையெல்லாம் அனுபவிக்க உங்களை விட அறிவார்ந்த மேல்த்தட்டு சமூகம் இருக்கு... அவங்க இந்த மாதிரி கையில ஆ*யுதத்த தூக்காம, சமர்த்தா, படிச்சு முன்னேறி பெரிய பெரிய வேலைகளில், பதவிகளில் செட்டிலாவாங்க! நீங்க மீசைய முறுக்கிக்கிட்டு வீரம் பேசிட்டே கிடக்கணும் என்பது தான்!

சமீபத்தில் ஒரு வீடியோவில், தனது ஜாதிக்கூட்டத்தில் பேசிய ஒருவரின் பேச்சு என்னை கவர்ந்தது. அவர், இந்த உளவியலை உடைத்துப் பேசினார். திரைப்படங்களில் ஏன் நம்ம சாதி ஹீரோன்னாலே ஆ*யுதத்தை தூக்கிட்டு சண்டை போட்டுக்கிட்டிருக்க முரடனாவே காட்டுறாங்க? ஏன் நம்ம ஜாதியில படிச்சு பல்வேறு முக்கிய பொறுப்புக்களுக்கு வந்திருக்காங்களே... ஹீரோக்களை ஏன் அப்படியெல்லாம் காட்ட மாட்டீங்கறாங்க? நம்ம ஜாதின்னாலே இப்படித்தான்னு காட்டி காட்டி கட்டமைத்து இளைஞர்களை அப்படியே மாத்துறது தப்புன்னு இயக்குநர்களிடம் சொன்னாலும் திருந்திக்க மாட்டீங்கறாங்க என்று ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருந்தார்.

சமீபத்துல வந்த கந்தன் மலை யூட்யூப் வீடியோ படத்தில் கூட பாருங்க... எச்.ராஜா என்ற ஹீரோ, தனக்கு கொஞ்சம்கூட பொருந்தவே இல்லைன்னாலும் ஒரு பெருத்த மீசையை கஷ்டப்பட்டு ஒட்டிக்கிட்டு, கையில ஆ&யுதத்தை தூக்கிட்டு திரியிறாரு! ஏன், அவரு அவரோட ஒரிஜினல் மீசையோடவே நடிச்சிருக்கலாம் தானே? அடர்த்தியான முறுக்கு மீசை வச்சிருக்கவுங்க தான் ஆ*யுதத்த தூக்குவாங்க... மத வெ*றியேறி இருப்பாங்கன்னும், மீசை மழிச்சவங்க தூக்க மாட்டாங்கன்னு உணர்த்தப் பார்க்கிறாரா? மீசை என்பது வெறும் மயிர் தான்... என்ற உண்மையை நமக்கு புரியவிடாமல் செய்யும் தொடர்ச்சியான உளவியல் தாக்குதல் தான் அது!

எனவே இதுபோன்ற திரைப்படங்களை புரிந்துகொண்டு, நம்மை மூளைச்சலவை செய்யும் காமெடி பீஸ்களின் நயவஞ்சக அரசியலுக்கு எதிரான மனப்போக்கை வளர்த்துக்கொள்ள வேண்டியது காலத்தின் கட்டாயம்! அதற்கு தேவை, கல்வி குறித்த விழிப்புணர்வும், உலகளாவிய நூல்களின் வாசிப்பும், பிறப்பால் உயர்வு தாழ்வில்லை, அனைவரும் சமமென்ற சிந்தனையும் மட்டுமே! புரிந்துகொண்டால் வாழ்தல் இனிது!

Address

Tenkasi

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tenkasi dist second sales item posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category